Skip to main content

Posts

Showing posts from May, 2020

பெண்ணானவன்

"நான் ஏன் பீச் போற ட்ரைன் ஏறுனேன்?" என்னை நானே குழப்பிக்கொள்கிறேன் என்று மட்டும் தெரிந்தது. அக்டோபர் 12, என் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாக அமையக்கூடும் என்று இரவு 9 மணி வரையில் நான் ஊகித்திருக்கவில்லை. ‘நொடிகள் போதும் வாழ்வினைத் திருப்பிப் போட’ என்பதை அன்று தான் உணர்ந்தேன். குரோம்பேட்டை ரயில் நிலையத்தில், படி இருக்கும் பக்கம் இல்லாமல் மறுபக்கத்தின் இறுதிவரையில் சென்று, காலியாக இருக்கும் கல்லிருக்கையில் அமர்ந்துகொண்டேன். அங்கு தான் வழக்கமாக நானும் அவனும் அமர்ந்து காதல் பரிமாறும் இடம். எப்பொழுதும் எங்களை பல இரண்டு கண்கள் கண்டுகொண்டே இருந்தாலும், நாங்கள் அதனை பொருட்படுத்தியதில்லை.  ஆனால், தனிமையில் அமர்ந்துகொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் என்னை, வழிபோகும் எல்லாக் கண்களும் கண்டுநகைப்பதாய் எனக்குள் தோன்றியது. அவர்கள் கண்களுக்கு பைத்தியக்காரப் பெண்ணாய் நான் தெரிந்திருக்கலாம்! செங்கல்பட்டில் இருக்கும் எனது தோழியின் அறைக்கு செல்வதாய் தான் என் எண்ணம். நாம் எதிர்பார்த்த நேரத்தில் நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் வண்டி என்றுமே வருவதில்லை! என்னால் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்க ம...

அனு

அன்றைய விழிப்பும் அவனுக்கு பரபரப்பாகத் தான் அமைந்தது; வியர்வைத் துளிகள் உடல் முழுதும் அலங்கரித்தன. பயத்தின் களை முகத்தில் பிரதிபலித்தது. ஏற்கெனவே களைந்துபோய் பைத்தியக்காரன் என்று இவன் நண்பர்கள் கிண்டலடிக்க தூண்டும் இவனது தலை முடியின் நிலை இப்பொழுது மேலும் கவலைக்கிடம். “என்னா மச்சான் இன்னிக்கும் அதே கனவா?” என்றான் சாய். ‘ஆமாம்’ என்றது போல தலையை ஆடிவிட்டு இயற்கையின் அழைப்பை ஏற்க்கச் சென்றான் காமேஷ். இவர்கள் தாம்பரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார்கள்; இவர்கள் என்றால் சாய், காமா மற்றும் அருண். ஆனால் இன்று நான்கவதாக ஒருவன் சாயுடனும் அருணுடனும் சீட்டு ஆடிக்கொண்டிருந்தான். விடுமுறை நாட்களில் இவர்களிடம் விருந்தாளிக்குப் பஞ்சமில்லை. கனவு என்று கூறிவிட்டு ‘என்ன கனவு’ என்ற முடிச்சியை அவிழ்க்காமல் இருப்பது விருந்தோம்பல் ஆகாது. ஆதலால் விளக்கினார்கள் பள்ளியின் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்த வயதில் காதலின் தென்றலால் கவரப்பட்டு, ஓராண்டு காலம் எந்த ஒரு சண்டை சச்சரவு வந்தாலும் சமாதான முத்தங்கள் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு வாழ்வினை ரசித்துக்கொண்டிருந்த இவனுக்கு , காதலி சாலையின் பசிக்கு இரையாகிப் போனதை க...