Skip to main content

Posts

ஆம்பள டா..!!

  தமிழ் திரைப்படமான காஞ்சனா படத்தில் கதாநாயகனுக்கு பேய் பிடித்துவிடும். அதனால் ஏற்பட்ட உடல் மொழி மாற்றத்தைக் கண்ட அவரது அண்ணன், ‘ராகவா பொண்ணு மாதிரி நடந்துகாதடா!’ என்பார். அந்த அளவிற்கு பெண்ணாக அவர் அந்த இடத்தில் என்ன செய்து விட்டார்? ‘இல்ல, புரில எனக்கு!!’ நமது சமூகம் ஆண்களால் ஆண்களுக்காக ஆண்களாகவே கட்டமைக்கப்பட்ட ஒரு ஆண் சமூகம், ‘நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்’. அந்த சௌகரிய இடத்தை இழக்காமல் காலாகாலத்திற்கும்  பாதுகாக்கவே அவர்கள் பெண்களை பயன்படுத்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இங்குள்ள மதங்களும் மற்றைய சமூக அமைப்புகளான திருமணம் போன்றவைகளும் அதற்கே துணைபோகின்றன. அதே நேரத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் எழுப்பிய பெண்களின் மறைக்கப்பட்ட வரலாறும் இங்கு பல உண்டு. அவர்கள் விடுத்துச் சென்ற விடுதலை உணர்வு இங்குள்ள பெண்களுக்கு இல்லாமல் இல்லை. காலம் காலமாக தாங்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றோம் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கியதாலே இன்றைய வாழ்வில் அவர்களால் சிறிதேனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகின்றது.  ஆனால், இந்த சமூகம் ‘ஆண்’மயமாகியதால் ஆண்கள் சுதந...

Morattu Single-ness எனும் நோய்!

தற்போதைய நவ நாகரிக சமூகத்தில் பங்கு கொள்ளும் இளைஞர்களின் வாய் வார்த்தைகளில் தவிர்க்க முடியாத சொல்லாடலாக வழங்கி வருகிறது ‘ morattu single ’ என்னும் பதங்கள் . அதனை பற்றிய எனது எண்ணங்களை , இதுவரையில் என் வாழ்வில் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் ஆதாரமாகக் கொண்டு , உங்களோடு உரையாடுகிறேன் .   இக்கட்டுரையில் முழுக்க முழுக்க ஒரு ஆணின் பார்வையே சொல்லப்பட்டிருக்கும் என்பதையும் தெளிய வைத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் . ‘ நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டேன் ’ என்றும் ‘ பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்குற வகை ’ என்றும் தற்புகழ்ச்சியாகக் கூறிக்கொண்டு திரிவது பேஷன் ஆகி விட்டது . உண்மையில் பெண்களிடம் சகஜமாக பேசும் சிலரும் அதனை மறைத்து , தாங்களும் ‘ morattu single’கள் தாம் என மார்தட்டிக்கொள்கிறார்கள் .  ஆராய்ந்து பார்க்கையில் இது பெருமைப்படக் கூடிய ஒன்றாக தெரியவில்லை .  இவ்வாறு கூறுபவர்கள் இரண்டு விதத்தவர்கள் . தாங்கள் படிக்கும் பள்ளிக் கல்லூரியில் சக - மாணவிகளிடமோ , பணியிடங்களில் சகப் பெண் பணியாளர்களிடமோ சகஜமா...